இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவத்தின் முக்கியமான உண்மைகளில் ஒன்று நம்முடைய உடமைகள் . நான் சொந்தமானவன் ! நான் தேவனுக்கு சொந்தமானவன் . நான் இயேசுவுக்கு சொந்தமானவன் . நான் இயேசுவின் சரீரமான திருச்சபையைக்கு சொந்தமானவன் . அந்த சரீரத்தில் எனக்கு அங்கே ஒரு இடமும், நோக்கமும் உண்டு. நான் சொந்தமானவன் ! நான் தேவைப்படுகிறேன் ! நான் செய்ய வேண்டிய ஒரு வேலை எனக்கு இருக்கிறது! நான் சொந்தமானவன் !!

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம்முடைய குமாரனாகிய இயேசுவின் சரீரமாகிய சபையிலே நீர் அடியேனுக்கு வைத்திருக்கிற இடத்தை கண்டுபிடிக்க உதவியருளும். உமக்கு ஊழியம் செய்வதில் எனது தாலந்துகளை பயன்படுத்துவதற்கு சரியான இடத்தை நான் அறிந்து கொள்ளும் வரை, என்னுடைய விருப்பம் மாத்திரமே அல்லாமல், உம்முடைய ஆவியானவரால் நடத்தப்படும் எல்லா வகையான தேவப்பணிகளிலும் உமக்கு ஊழியம் செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன்,அவர் என்னை ஊழியஞ் செய்ய உம் இடத்திற்கு வழிநடத்துவார். நான் உமக்கு சொந்தமாக மட்டுமல்லாமல், ஊழியம் செய்யவும், உலகில் இயேசுவின் சரீரமாகிய சபையின் ஒரு அவயமாகவும் எனக்கு ஒரு இடத்தை வழங்கியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து