இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகெங்கிலும் உள்ளவர்கள் மற்றும் பல்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் "இன்றைக்கான வசனத்தைப்" படிக்கிறார்கள். நமது தேசிய தோற்றம் மற்றும் இன மரபுகள் வேறுபட்டாலும், நாம் யாவரும் ஒரே ராஜ்யத்தின் அங்கத்தினர்கள். எங்கள் விசுவாசமானது இனம், கலாச்சாரம், மொழி மற்றும் தேசம் ஆகியவற்றைக் கடந்தது. ஏன்? ஏனென்றால், இனம், கலாச்சாரம், மொழி, தேசம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் பிடியிலிருந்து நாம் மீட்கப்பட்டுள்ளோம். அந்த ஆதிக்கம், இருளின் ஆதிக்கம், நம்மைப் பிரித்து, ஒருவரையொருவர் சந்தேகப்பட வைத்து, வெறுப்புக்கும் போருக்கும் வழிவகை செய்கிறது. எங்களுக்கு மகிமையான மற்றும் நீடித்த நிலையான ராஜ்யம் கொடுக்கப்பட்டுள்ளது! இனம், மொழி, சமூக அந்தஸ்து, தேசம் அல்லது நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்லாத - நாம் மிகவும் மகிமைநிறைந்த மற்றும் மேன்மையான மக்களாக ஆக்கப்பட்டுள்ளோம்! நாம் தேவனின் புத்திரர் மற்றும் அவர் நேசிக்கும் குமாரனுடைய ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , மாயையான வெளித்தோற்றத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் தடைகளைத் தகர்க்க எங்களை எடுத்து பயன்படுத்துங்கள். குணாதிசயம் , நம்பிக்கை மற்றும் அன்பின் ராஜ்யத்திலே எங்களை உட்படுத்துங்கள் . எங்கள் இருதயங்களிலிருந்து எல்லா இருளையும் புறம்பே அகற்றியருளும் . உமது கிருபையின் ஒளியை நாங்கள் வாழும் உலகிற்கு எங்கள் மூலமாய் பிரகாசிக்கும்படி செய்யும் , இதன் மூலமாக எங்களைப் பிரிக்கும் காரியங்களிலிருந்து குணப்படுவதை மக்கள் காண முடியும். எல்லா மக்களுக்கும் ஒரே இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து