இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

காரியங்கள் கடினமாக இருக்கும்போது, ​​​​தேவனை நோக்கி கூப்பிட்டு அவருடைய இரக்கம் மற்றும் கிருபையின் மீது சாய்வதும் எனக்கு லேசான காரியம் . அவர் என் பாதைகளைச் செவ்வைப்படுத்தும் மீட்பரானவர். நான் அவருடைய ஆசீர்வாதங்களில் மகிழ்ச்சியடைந்து, காரியங்கள் நன்றாக இருக்கும் வேலைகளில் நான் இவற்றை அறிக்கையிட வேண்டும், ஆனால், அடியேனும் இஸ்ரேவேல் ஜனங்களை போலவே இருக்கிறேன், எனக்குக் கிடைத்த எல்லா ஆசீர்வாதங்களிலும் , எனக்குக் கிடைத்த வாய்ப்புகளும் அவருடைய கிருபையால் உண்டானவை என்பதை அறிக்கையிட அநேக வேளைகளில் மறந்துவிடுகிறேன். எனது சந்தோஷத்திலும், வெற்றியிலும், நான் அவரை அறிக்கையிட கற்றுக் கொள்ள வேண்டும், காரியங்கள் நன்றாக நடப்பதாகத் தோன்றும்போது என் சுயபுத்தியின் மேலும் மற்றும் சொந்த பெலத்தின் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது!

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , என் வாழ்வில் எனக்குக் கிடைத்த எல்லா நன்மைகளும் உம்மால் உண்டானவை . நான் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம், நான் பெற்ற பாதுகாப்பு, நான் வைத்திருக்கும் சம்பத்து , நான் அனுபவித்த வெற்றிகள், நான் பெற்ற நம்பிக்கை, நான் பெற்றுக்கொண்டதான இரட்சிப்பு மற்றும் நான் எதிர்நோக்கும் எதிர்காலம் அனைத்தும் உனது கிருபையால் உண்டானது மாறாக என்னுடைய நன்மையினால் உண்டானது அல்ல. நன்றி! நன்றி! இயேசுவின் நாமத்தினாலே நான் உமக்கு மேலும் நன்றிகளை கூறி ஜெபிக்கிறேன் ! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து