இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பொல்லாதவர்களும் , துன்மார்க்கரும் அவமானத்திலிருந்து தப்பித்து செல்லும்போது - குறிப்பாக அவர்கள் அதைப் பற்றி பெருமிதம் கொள்ளும்போது நம்முடைய மனம் தளர்ந்து போகாமல் இருப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள கிறிஸ்தவர்கள்,உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தீமையைப் பற்றிய காரியங்கள் அவர்கள் மனதை மிகவும் தொந்தரவு செய்யும் விஷயங்களாக உள்ளது . கொடுமையுள்ளவர்கள் தேவனுடைய மக்களைச் சேர்ந்தவர்களை ஏளனம் செய்து மற்றும் நன்மைக்கும், தீமைக்கு இடையிலான வேறுபாடுகளை சிதைக்கிறது. உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளே, ஒன்று சேர்வோம், தெளிவான, தீர்க்கமான வழியினாலே இடைப்பட்டு, வன்முறை மற்றும் துன்மார்க்கம் நிறைந்த இந்த நாட்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி பரலோகத்தின் தேவனை நோக்கி விண்ணப்பிப்போம் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, தயவு செய்து எங்கள் உலகில் ஆட்சி செய்யும் அக்கிரமத்தின் சக்தியை உடைத்து அதை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். துன்மார்க்கரின் வீழ்ச்சி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரத்தில் உள்ளது என்பதை தெளிவுப்படுத்துங்கள். கர்த்தராகிய இயேசுவே, தேவனுக்கும் எங்களுக்கும் இடையில் நிற்கும் ஒவ்வொரு தீய சக்தியையும் அழித்துவிடுங்கள் . தயவு செய்து, ஆண்டவரே, உமது ராஜ்யத்தின் நித்திய ஆட்சியின் புகழ்பெற்ற தொடக்கத்தைக் கொண்டு வாருங்கள். கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக, உமது நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து