இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தினமும் இயேசுவோடு யார் நடக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறீர்களா? இயேசுவின் வாழ்க்கையை தங்கள் ஜீவியத்தில் பிரதிபலிக்கிறவர்களை தேடுங்கள்! அப்போஸ்தலனாகிய பவுலானவர் அதை "கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் " என்று விவரிக்கிறார் (2 கொரிந்தியர் 2:14-17). நீங்கள் இயேசுவுடன் நடக்க விரும்புகிறீர்களா? இந்த நற்கந்தத்தை இன்னும் அதிகமாய் வீச விரும்புகிறீர்களா? இயேசுவானவரை பின்பற்றி செல்லுங்கள் ; அவர் கற்பித்த யாவற்றிற்கும் கீழ்ப்படிந்து, அவருடைய வாழ்க்கையை குறித்து சுவிசேஷ புஸ்தகத்தில் வெளிப்படுத்தப்பட்ட எல்லா குணாதிசயத்தையும் பின்பற்றுங்கள்.* அவர் ஜனங்களை எப்படி நடத்தினார் என்பதைப் பாருங்கள்; பிறகு அதையே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடப்பியுங்கள் ! அவர் சாத்தானை எவ்வாறு தோற்கடித்தார் மற்றும் சோதனையை எப்படி ஜெயித்தார் என்பதைக் கவனியுங்கள்; நீங்களும் அதையே செய்ய முடியும் என்று விசுவாசியுங்கள் ! இந்த வழிகளில் நீங்கள் இயேசுவானவரை பின்பற்றி நடக்கும் போது , ​​இயேசுவானவர் உங்களோடு நடப்பது மாத்திரமல்ல , பரிசுத்த ஆவியானவரை கொண்டு உங்களுக்குள் கிரியை செய்து அவரை போல இன்னும் அதிகமாய் மறுரூபமாவதற்கு செயல்படுகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள்!

என்னுடைய ஜெபம்

தேவனே , என் ஆவியை அனல்மூட்டி , இயேசுவைப் போல மெய்யானவராகவும், பரிசுத்தமுள்ள வாழ்க்கையை வாழ உமது பரிசுத்த ஆவியினால் எனக்கு அதிகாரத்தை தாரும் . அன்புள்ள பிதாவே , உமது குமாரனாகிய இயேசுவைப் போல, ஜனங்களுக்காக துயரப்படுகிற இருதயத்தை எனக்குத் தாரும் . அவர்களின் தேவைகளைப் பார்க்கவும், அவர்களின் அழுகையைக் கேட்கவும் மட்டுமல்லாமல், அன்புடனும் இரக்கத்துடனும் பொறுமையுடனும் பதிலளிக்க எனக்கு உதவிச் செய்யும் . என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து