இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிசாசினால் உண்டாகும் தாக்குதலிருந்து தேவனின் ஜெயமும் , தேவனுடைய ஜனத்தின் வெற்றிக் கொண்டாட்டமும் வரும் . நம் பெலனையும், பாதுகாவலையும் நம்முடைய பரிசுத்த தேவனிடம் தேடுவோமாக! நம்முடைய தேவனையே மறைவிடமாகவும், பாதுகாவலின் உறைவிடமாகவும், நம் துன்ப நேரங்களில் நம்பிக்கையாகவும் கொள்ளுவோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, பிசாசினால் உண்டாகும் எல்லா தாக்குதலிருந்து நீர் அடியேனை மீட்டுக்கொள்ளுவீர் என்று உம் வல்லமையின் மீதும் , பெலத்தின் மீதும் கொண்டுள்ள உறுதிக்காக உமக்கு நன்றி சொல்லுகிறேன். நீர் எல்லா மகிமைக்கும், கணத்துக்கும், அதிகாரத்துக்கும், துதிக்கும் பாத்திரர். உம்முடைய குமாரனும், எனது ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமது மகத்துவத்திற்காக உம்மை போற்றுகிறோம், எங்கள் மீட்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து