இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் வெட்கப்படுகிறீர்களா ? கலாச்சாரம் நம் விசுவாசத்தை வெட்கப்படுத்துவதற்கு முயற்சிக்கிறது, விசுவாசமுள்ள மக்களை முட்டாள்களாகவும் , உணர்ச்சியற்றவர்களாகவும் , நியாயமற்றவர்களாகவும் பாசாங்குத்தனமாகவும் சித்தரிக்கிறது. நீங்கள் வெட்கப்படுகிறீர்களா ? இயேசுவை ஆண்டவராக அறியாதவர்களுடன் உங்கள் விசுவாசத்தை பணிவுடனும்,கனிவுடனும் பகிர்ந்துகொள்ள நீங்கள் விருப்பமுடன் இருக்கிறீர்களா ? நீங்கள் வெட்கப்படுகிறீர்களா ? உங்கள் மணவாளன் பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்து எல்லாவற்றையும் தந்து அவருடன் நாமும் பரலோக வீட்டில் பங்குள்ளவர்களாகும்படி செய்தார். சுவிசேஷம் வல்லமையுள்ளது, மறுரூபமாக்க கூடியது .இந்த சுவிசேஷமும், அது தரும் இரட்சிப்பும் எல்லா மக்களுக்கும் உரியது. எனவே நாம் வெட்கப்பட வேண்டாம்; நாம் பெற்ற இந்த நம்பமுடியாத ஈவை குறித்து மகிழ்ச்சியாகவும் தாராளமாகவும் இருப்போம்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே, இயேசுவைத் தங்கள் ஆண்டவராகவும்,இரட்சகராகவும் அறியாத என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் உமது கிருபையின் அற்புதமான அன்பை பகிர்ந்துகொள்ள எனக்கு ஞானத்தையும், உணர்வையும், தைரியத்தையும் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து