இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு நமக்கு வெளிச்சத்தைக் கொண்டுவரும் ஜீவனை தருகிறார். அவருடைய ஜீவன் மெய்யானது , நீடித்தது மற்றும் அணையாத ஒளியை நமக்கு கொடுக்கிறது . சாத்தானின் இருளால் மேற்கொள்ள முடியாத ஒளியை நமக்குத் தரும் ஜீவனை இயேசுவானவர் நமக்குத் தருகிறார். நம் இருளாம் உலகில் பிரகாசிக்க தேவனானவர் தம் குமாரனகிய இயேசுவை அனுப்பினார், மேலும் சாத்தானின் எல்லா சக்திகளும், பொல்லாத ஆவிகளும் இந்த ஆழமான இருளை மீண்டும் ஒன்றாக இணைக்க முடியாது, ஏனென்றால் இயேசுவின் மெய்யான பிரகாசமான ஒளி வீசுகிறது! அல்லேலூயா!

என்னுடைய ஜெபம்

ஒவ்வொரு நன்மையான ஈவும் மற்றும் பரிபூரணமான வரமும் (யாக்கோபு 1:17), என் ஆழ்ந்த இருளின் தருணங்களிலும், அணையாத ஒளிக்காக (யோவான் 1:5), ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாழப்போகிற நம்பிக்கைக்காக (1தீமோத்தேயு 6: 16), நான் உமக்கு நன்றிகளை செலுத்தி,நித்திய மகிழ்ச்சியுடன் துதிக்கிறேன் (ரோமர் 2:7), தேவனே , இப்போதும் சதாக்காலங்களிலும் உமக்கு மகிமையையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து