இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிதா தம் நேச குமாரனை அனுப்பினார். நம் இரட்சகரையும், ஆண்டவரையும் போல ஒருவரும் செய்ய மாட்டார்கள். தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் போதகர்களை பிதாவானவர் அனுப்பினார், ஆனாலும் அவர்களால் தேவையான இரட்சிப்பையும் நம்பிக்கையையும் கொண்டுவர முடியவில்லை. மதமானது பூமிக்கும் சட்டதிட்டத்துக்கும் மற்றும் அழிவுக்கு உட்பட்டது. எனவே, தேவன் அவருக்கு மிகவும் விலையேறப் பெற்ற ஒருவரை நமக்காக அனுப்பினார்: அவர் அவருடைய நேசக் குமாரன் . ஏன்? உங்களையும் என்னையும் போன்ற அற்ப மனிதர்களை அவருடைய குடும்பத்தில் புத்திரராய் இருக்கும்படி , தேவனுடைய குடும்பத்தில் நாம் சுவிகார புத்திரராக்கப்பட்டதால், இரட்சகர், தேவனுடைய குமாரன் மற்றும் விசுவாசத்தில் நம் சகோதரனாகிய இயேசுவானவர் பெறும் அதே உரிமைகளைப் நாமும் பெற முடியும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, உமது குமாரன் மூலமாய் என்னை மீண்டும் உமது குடும்பத்தில் சேர்த்ததற்காக உமக்கு நன்றி. நான் செய்த பாவங்களுக்கு தக்கதாக என்னை நடத்தாமல் இருந்ததற்காக உமக்கு நன்றி. என்னை நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் அடிமையாக விட்டுச் செல்லாமல், உம் கிருபையின் மூலம் உம் பிள்ளையாக மாறும் அன்பான உறவில் என்னை மீட்டமைக்காக நன்றி. உம் வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் காலம் வரும் வரை பழைய ஏற்பாட்டு வரலாற்றின் மூலமாய் வழிவகுத்த உம் மீட்பின் திட்டத்திற்காக உமக்கு நன்றி. உம் சொந்த குமாரனை அனுப்பியதற்காக நன்றி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து