இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார்! அது மெய்யான ஜீவன், அவருடனே என்றென்றும் நிலைத்திருக்கும் நித்திய ஜீவன் ! ஆகவே பிதாவாகிய தேவன் இயேசுவானவரை அனுப்பினார். அதனால்தான் குமாரனாகிய இயேசு, பிதாவிவினிடமிருந்து இப்பூமிக்கு இறங்கி வந்தார். அதற்காகவே இயேசுவானவர் சிலுவையில் எல்லா நிந்தையையும் அவமானங்களையும் சகித்தார். அதனால்தான் இயேசுவானவர் சாத்தான், பாவம், மரணம், பிசாசுகள் மற்றும் நரகம் ஆகிய யாவையும் வெற்றிசிறந்து உயிர்த்தெழுந்தார். தேவன் இயேசுவின் மூலமாய் என்றென்றும் நிலைத்திருக்கும் நித்திய அன்பினால் நம்மை நேசித்தார்! தேவன் இவ்வுலகத்திலே எவரும் எப்பொழுதும் கொடுக்கமுடியாத மாபெரிதான ஈவை நமக்கு அளித்து நம்மை நேசித்தார். எனவே, "வாருங்கள், கிறிஸ்துவே ஆண்டவர் , அவரை போற்றுவோம் !" அவரே நம் வாழ்நாளில் நமக்கு கிடைத்த மிகச் சிறந்த ஈவுவாகும் !

என்னுடைய ஜெபம்

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; " (யாக்கோபு 1:17). அன்புள்ள பிதாவே , உம் அனைத்து ஈவுகளிலும் ,உம் குமாரனாகிய இயேசுவை யாராலும் ஒப்பிட முடியாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளுகிறோம் . நீர் யார் என்பதாலேயே நீர் எல்லா துதிக்கும், ஸ்தோத்திரத்துக்கும் தகுதியானவர்: உன்னத தேவன் ! தேவனானவர் , சிருஷ்டிகர் மற்றும் வழங்குபவர்: நீர் வல்லமையாய் நடப்பித்த அநேக காரியங்களுக்காக எல்லா துதிக்கும் பாத்திரர் நீர் மாத்திரமே . சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களோடும், நம்மிடையேயும் தேவனுடைய குமாரனாக எங்களோடு இருந்து, எங்களை இரட்சிக்க எங்களில் ஒருவராக இயேசுவை அனுப்பி அவர் மூலமாய் நீர் காண்பித்த அன்பின் காரணமாக எங்கள் இருதயம், ஆத்துமா, மனம் மற்றும் பெலன் ஆகிய எல்லாவற்றிக்கும் பாத்திரர் . இந்த அற்புதமான ஈவுக்காக உமக்கு கோடான கோடி நன்றி! இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றி செலுத்தி , துதித்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து