இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்ற சிறிது நாட்களிலே , அவர் நாற்பது நாட்கள் கடுமையான சோதனையில் சாத்தானை எதிர்கொள்ள சென்றார். சோதனையின் இந்த தருணத்தில் சாத்தான் பேசிய முதல் வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? "நீர் தேவனுடைய குமாரனேயானால்....... " பொல்லாங்கனால் கேட்பதற்கு முன்பே தேவன் இயேசுவோடு உள்ள உறவை அதாவது நேச குமாரன் மற்றும் அவர் மீது உள்ள பிரியம் ஆகியவற்றைக் குறித்து அவருக்கு முன்னமே உறுதியளித்தது மிக பெரியதல்லவா? இயேசுவானவர் உபத்திரம் மற்றும் சோதனைகளை எதிர்கொள்வதற்கு முன்பே குமாரனுக்கு இந்த வாக்குறுதி மிகவும் அவசியம் என்பதை பிதாவானவர் அறிந்திருந்தார். மெய்யாகவே , நாம் நேசிக்கிறவர்களுக்கு இதே போன்ற வாக்குறுதி மிகவும் அவசியமானது, மேலும் இயேசுவைக் காட்டிலும் அவர்களுக்கு அது தேவை. அது அவர்களுக்கு நம்மிடமிருந்து தேவை! நீங்கள் நேசிப்பவர்கள் இன்று உங்களிடமிருந்து எதை கேட்க வேண்டும்? அவர்களுக்கு சோதனை எப்போழுது நேரிடும் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் அது கண்டிப்பாக ஒரு நாள் வரும் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அவர்களுடனான உங்கள் உறவில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள், அவர்கள் மீது அன்பு செலுத்துகிறீர்கள், அவர்களில் பிரியமாயிருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு வாக்களியுங்கள் . மேலும், இயேசுவுக்குள் உள்ள அன்பான நண்பரே, அதை இன்றே செய்யுங்கள்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும்,அன்புமுள்ள பிதாவே , தயவு செய்து நான் நேசிப்பவர்களுக்கு சரியான அன்பு மற்றும் நேசத்தின் வார்த்தைகளைச் சொல்ல எனக்கு உதவுங்கள், இதனால் உபத்திரவங்கள் மற்றும் சோதனைகள் வரும்போது அல்லது மற்றவர்கள் என்னை விட்டு விலக முயற்சிக்கும் போது, ​​அவர்கள் மீதான என் அன்பையும் உம் அன்பையும் சந்தேகிக்க மாட்டார்கள். அவர்களுக்காக இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து