இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர் முன்னதாக நம்மில் அன்புகூர்ந்தார் ! அவருடைய கிருபையை விசுவாசிப்பது அல்லது புறக்கணிப்பது என்ற நம்முடைய முடிவைப் பொருட்படுத்தாமல், நம்மை மீட்கும்படியாய் அவர் தம்முடைய நேசக்குமாரனை தந்தருளினார் . அவருடைய குமாரனின் மரணத்தை நம்முடைய பாவங்களுக்கான கிருபாதாரபலியாக ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் திறனை நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு நிபந்தனை மாத்திரமே, அவற்றை யோவான் ஆசிரியர் 1யோவான் 2: 1-2 வலியுறுத்துவது போல, அவர் உலகில் உள்ள அனைவருக்காகவும் மரித்தார் என்பதை நாம் உணர வேண்டும்!

Thoughts on Today's Verse...

He loved us first! He offered his Son to save us regardless of our decision to believe or ignore his grace. We are given the ability to accept or reject the death of his Son as the sacrifice for our sins. The only condition, as 1 John 2:1-2 emphasizes, is that we realize that he died for everyone else in the world, too!

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற ராஜாவே , சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் ஏன் என்னில் அன்புகூர்ந்தீர் மற்றும் எனக்காக மரிக்க உம் குமாரனாகிய இயேசுவை அனுப்பினீர் , என்னால் ஒருபோதும் இந்த அன்பை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை . உம் மாசற்ற மற்றும் மகாப்பெரிய அன்பிற்காக உமக்கு நன்றி. என் பாவங்களுக்கு விலையாக நீர் கொடுத்த பலிக்காக நன்றி. என்னை மீட்க வந்ததற்கு நன்றி. இயேசுவே உமது நாமத்தினாலும் , உமது பரிந்துரையாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Precious King, God Almighty, why you should love me and send Jesus to die for me I will never fully understand. Thank you for your love. Thank you for your sacrifice for my sins. Thank you Jesus for coming to save me. I pray in your name and by your intercession. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  1 யோவான் 4:10

கருத்து