இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக என்பதை கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறதல்லவா . இந்த இரண்டு ஆசீர்வாதங்களும் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கு இரண்டு விஷயங்கள் இன்றியமையாதவை. முதலில், நம் தேவைகளைப் சந்திப்பதற்கும் , நாம் அடைய வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கும் தேவனை முழுமையாக விசுவாசிக்க வேண்டும்.இரண்டாவதாக, பரிசுத்த ஆவியின் வல்லமையை கொண்டு நம்மை ஆசீர்வதிக்கவும் , தேவனுடைய குணாதிசயங்களால் நம்மை பலப்படுத்தவும் வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

மகா வல்லமையுள்ள தேவனே , நீர் என் அருகில் இருந்து எனக்கு எப்போதும் உதவி செய்ய ஆவலாய் இருக்கிறீர் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்க என்னை ஆசீர்வதியும் . அன்புள்ள பிதாவே , நீர் விரும்பும் வண்ணமாக இருக்கும்படி என்னை ஆசீர்வதித்து பெலப்படுத்தும் . உம் ஆவியினால் என்னை நிரப்பும், அதினால் நான் இவ்வுலகில் இயேசுவானவர் வாழ்ந்ததைப் போல என் வாழ்க்கையை இங்கு வாழ முடியும். என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து