இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கடைசியாக நீங்கள் எப்போது தேவனுடனான உணர்ச்சிப்பூர்வமான நடைப்பயணத்திலிருந்து விலகிச் சென்றீர்கள்? நம் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, நம் இருதயத்தை இயேசுவின் பக்கம் திருப்பி , நம் அன்றாட வாழ்கையை தேவனுக்காக வாழும்போது வசந்த காலங்கள் வரும்! இதுதான் உண்மையான மனந்திரும்புதல். நாம் மனந்திரும்பி அவருக்காக வாழும்போது, ​​இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவதாகவும், அவர் நம்மோடே வாசம் செய்வார் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார் (யோவான் 14:15-21, 23-24). அவருக்காக வாழ நாம் மனந்திரும்பி நம் இருதயங்களையும் வாழ்க்கையையும் முழுவதுமாக திருப்பும்போது, ​​​​அவருடனே வாழ நித்திய வீட்டிற்குச் செல்வதற்கும், அவருடன் என்றென்றும் நமது சிறந்த இளைப்பாறுதலை அனுபவிப்பதற்கும் நாம் இப்போது மன்னிப்பு மற்றும் பாவ வாழ்க்கையிலிருந்து இளைப்பாறுதலை அனுபவிக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நான் இன்று என் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக உம்மிடம் திருப்புகிறேன். என் வாழ்வில் பாவத்தை துறந்து உமக்காக வாழ ஆசைப்படுகிறேன். நான் செய்த எல்லா பாவத்திற்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். இன்று என் வாழ்வில் இயேசுவின் தேவத்துவம் மற்றும் பிரசன்னத்தை பற்றிய ஆழமான விழிப்புணர்வின் மூலம் நீர் என் ஆவியைப் புதுப்பிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உம் வாக்களிக்கப்பட்ட இளைப்பாறுதல் மற்றும் பிரசன்னத்தின் மீது நம்பிக்கை வைத்து நான் இதை இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து