இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சந்தோஷமான நேரங்களிலும் , கடினமான நேரங்களிலும், உயர்ந்த காலங்களிலும், தாழ்வுப்பட்ட நேரங்களிலும், கர்த்தருடைய கிருபை போதுமானதாக இருப்பதை உணர்ந்த பிறகுதான், பவுலானவர் பிலிப்பியர்களுக்கு இந்த காரியங்களை அளிக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தின் திறவுகோல் தேவனுடைய ஏற்பாடு மற்றும் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு மிகவும் வேண்டிய யாவையும் பெற்றுக்கொள்ள, அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையாகும். முழு மனதுடனே அவரை சேவிக்கவும் , அவரைப் பிரியப்படுத்தவும், அவருடைய பிரசன்னத்தால் ஆசீர்வதிக்கப்படவும், மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வின் நிச்சயத்திற்காக நம் இருதயம் ஏங்கும்போது, ​​ நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவனானவர் வழங்குவார் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைக்கலாம்!

என்னுடைய ஜெபம்

தேவனே , நீர் எனக்காக அளித்து வரும் பல அற்புதமான வழிகளை பார்க்கும்படி என் மனக் கண்களை திறந்தருளும் மற்றும் என் வாழ்வில் தேவையான அனைத்தையும் உம் கிருபையினால் நிறைவாக்குங்கள் . எனது பார்வை குறுகியது மற்றும் விசாலமற்றிருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். உம் பரந்து விரிந்த கிருபையை நான் காண வேண்டும். உம்முடைய ஆசீர்வாதம் செழிப்பானது, மகிமையுள்ளது, நிறைவானது என எனது பலவீனமான மனத்தால் அங்கீகரிக்க முடியும். நான் பார்க்காத இன்னும் பல விஷயங்களை நீர் எனக்கு ஆசீர்வதித்து தந்ததிருக்கிறீர் , எனவே அடியேனால் காண முடியாத அநேக விஷயங்களை நான் பார்க்கும்படி நீர் செய்கிறீர் என்று நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையை தாரும் . நீர் போதுமானவராக இருப்பதற்காக உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் ! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து