இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

குழந்தைகள் சுற்றுலா மற்றும் கோடை விடுமுறைகளை எதிர்நோக்குகிறார்கள். அந்த விஷயங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அவர்கள் கற்பனை செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பரலோகத்தை எதிர்நோக்கி, கர்த்தரை நேரில் காணவும், நமக்கு முன் மரித்து கர்த்தரின் வீட்டுக்கு திரும்பிய நாம் நேசிக்கும் நபர்களுடன் மீண்டும் ஒன்றிணைந்து, இயேசு மற்றும் அவரது தேவதூதர்களின் மகிமையில் பங்கு கொள்ள தரிசனம் காண்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியின் உதவி இல்லாமல் தேவன் நமக்காகத் தயாரித்துள்ள மகத்தான விஷயங்களை நாம் கற்பனை செய்ய ஆரம்பிக்க முடியாது. அவை நாம் தரிசிக்ககூடிய அல்லது கற்பனை செய்யக்கூடிய எதையும் விட மிகவும் மகிமையானவை. எனவே மகிமையால் ஆச்சரியப்படுவதை எதிர்பார்த்து, அதுவரை ராஜ்யத்தின் நோக்கத்திற்காக ஆர்வத்துடன் வாழ்வோம். எந்தவொரு இழப்பும், எந்தவொரு காயமும், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். (ரோமர் 8:18). மேலும், நமக்கு பரிசுத்த ஆவி இருப்பதால், இந்த மகிமையின் காரியங்களை புரிந்துகொள்ள உதவும்படி ஆவியானவரிடம் கேட்போம், உண்மையில் நமக்கு என்ன மகிமையான விஷயங்கள் வருகின்றன என்பதை நாம் எதிர்பார்க்கலாம் (1 கொரிந்தியர் 2:10). நமக்குள் பரிசுத்த ஆவி வாசம் செய்வதால் , பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற நமக்கு இந்த பரிசுத்த வேதத்தின் அர்த்தம் வித்தியாசமாக விளங்குகிறது . இது நமது சாவுக்கேதுவான மாம்ச சரீரத்துக்கு ஜீவனை கொடுக்கும் ஆவியின் வல்லமையால் எதிர்காலத்தை எதிர்பார்ப்பதிலும் புரிந்துகொள்வதிலும் நம்மை ஒருமுகப்படுத்துகிறது (ரோமர் 8:11).

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்முடன் எனக்காக ஒரு மகிமைக்குரிய இடத்தை ஆயத்தம் செய்ததற்காக உமக்கு நன்றி - அது புதிய வானங்களிலும் பூமியிலும், அல்லது உம்முடன் பரலோக சிங்காசன அறையில், அல்லது இயேசுவுடன் இருப்பது, அல்லது பரலோகத்தில் உம்முடைய மகிமையில் உம்மை பார்ப்பது.* நான் கற்பனை செய்யக்கூடிய எதையும் விட இது மிகப் பெரியது என்று நான் நம்புகிறேன், ஆனால் உம்முடன் இந்த மகிமையான எதிர்காலத்தின் ஒரு காட்சியை எனக்குத் தருமாறு ஆவியானவரை நான் கேட்டுக்கொள்கிறேன். இயேசுவே, உம்முடன் மகிமையில் எனக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்ய பரலோகத்திற்குத் திரும்பியதற்காக நன்றி. கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நாமத்தில் நான் உம்மை துதித்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென். * புதிய வானங்களும் புதிய பூமியும் — 2 பேதுரு 3:12-15; பரலோகத்தின் சிங்காசன அறை — வெளிப்படுத்துதல் 7:7-11; இயேசுவுடன் இருப்பது — 2 கொரிந்தியர் 5:6; பிலிப்பியர் 1:19-25; கிறிஸ்து தம்முடைய உயர்ந்த மகிமையில் இருப்பதைப் தரிசிப்பது — 1 யோவான் 3:2-3.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து