இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீ யாருக்காக காத்திருக்கிறாய் ? இயேசுவானவர் மறுபடியும் வந்து அவருடைய மகிமையில் நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதை விட, உற்சாகமான காரியம் எதையும் உங்களால் நினைத்து பார்க்க முடியுமா! ஆனால் எங்களுடையது செயலற்ற காத்திருப்பு அல்ல. இயேசு தனது வரலாற்று சரித்திரத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், அவரைப் எங்களோடு சேர்ந்து பின்பற்ற மற்றவர்களை அழைக்கவும் ஒரு பிரதான கட்டளையை கொடுத்தார் . ஆகவே, பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவின் நற்செய்தியை உற்சாகமாய் பகிர்ந்துகொண்டு , பிதாவின் குணாதிசயத்துடனும், இரக்கத்துடனும் வாழ்ந்து நாம் எதிர்பார்ப்புடன் ஆவலாய் காத்திருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

தலைமுறை தலைமுறையாய் மகிமையுள்ள ராஜாவே , உம்முடைய இராஜ்ஜியம் அதன் முழுமையாய் வெளிப்படட்டும் , ஒவ்வொரு முழங்கால்களும் இரட்சகருக்கு முன்பாக முடங்கட்டும் , மேலும் அது எங்கள் தலைமுறையில் வெளிப்பட நீர் அனுமதியுங்கள். இயேசுவின் மூலம் நான் எதிர்பார்ப்புடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து