இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பல காரியங்களின் மூலமாக நமது எதிர்காலத்தை தீர்மானிக்க முயற்சி செய்யலாம். எவ்வாறாயினும், தெய்வீக ஞானமானது எப்போதுமே செல்வத்தைக் காட்டிலும் மிக சிறந்த முதலீடாகும், ஏனென்றால் அது நமது நிச்சயமற்ற எதிர்காலத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தெய்வீக ஞானம் மதியற்ற மற்றும் தேவபக்தியற்ற நடத்தைகளினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து நம்மை விலக்கி காத்துக்கொள்ளும் . எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனை மையமாகக் கொண்ட நம் வாழ்க்கை இல்லாமல் உறுதியான எதிர்காலம் இல்லை என்பதை தேவ ஞானம் நமக்குக் கற்பிக்கிறது. இருப்பினும், "தெய்வீக ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்;

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, நான் உமது வழிகளில் ஞானமுள்ளவனாகவும், தீய வழிகளில் குற்றமற்றவனாகவும் இருக்க விரும்புகிறேன். எனது முட்டாள்தனமான மற்றும் சில நேரங்களில் துரோகமான நடத்தைகளுக்காக அடியேனை மன்னியுங்கள். சத்தியம் , நியாயம் மற்றும் நீதியின் பாதைகளில் உமது பரிசுத்த ஆவியினால் என்னை வழிநடத்துங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து