இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனின் ஜனங்களாகிய நம்மை எந்த எதிரிகளால் தோற்கடிக்க முடியும்? நம்முடைய பரிசுத்த தேவனின் பிரசன்னம் நம்மிடையே இருப்பதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது அப்படி ஒருவருமில்லை ! நம்முடைய தேவன், நம்மை விடுவிப்பவர், வல்லமையிலே மகத்துவமுள்ளவர் , பரிசுத்தத்திலே ஆச்சரியமானவர் , நம்முடைய எல்லா எதிரிகளைவிடப் மிகவும் பெரியவர். வரலாறு முழுவதையும் நாம் பார்ப்போமானால் , கர்த்தர் தம்முடைய மக்களாகிய நமக்காகவும் அவருடைய அன்பையும், பிரசன்னத்தையும் , வல்லமையையும் அநேகமுறை நிரூபித்திருக்கிறார். எனவே, சாத்தான் நம்மை என்ன அச்சுறுத்தினாலும் நாம் சற்றே பயப்படாமலும் கலங்காமலும் இருப்போம் , ஏனென்றால் நம்முடைய இரட்சகர் முன்னமே நரகம், பாவம், மரணம், சாத்தான் மற்றும் பேய்களை ஜெயித்துவிட்டார் . அந்த ஜெயத்தை அவருடன் ஒரு நாள் நித்தியக்காலமாக அனுபவிப்போம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என் அச்சத்தை அமைதிப்படுத்தி, என் கவலை நிறைந்த இருதயத்தை ஆற்றியருளும் . உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் , என் விசுவாசத்திற்கு விரோதமான மற்றும் உம்முடைய நம்பிக்கைக்கு எதிரான உலகில் உமக்காக நான் வாழ முற்படுகையில், தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க என்னை ஆசீர்வதித்தருளும் . இந்த கிருபைகளை என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து