இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சகரியாவிடமிருந்து இந்த மேசியாவின் செய்தியானது கர்த்தருடைய மீட்பின் நாளை எதிர்பார்க்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து பலதரப்பட்ட மக்கள் தேவனின் மாபெரும் கிருபையை தேடி வருவார்கள். தேவனின் மக்கள் தங்கள் இருதயங்களில் ஒரு முக்கிய வேத வசனத்தை வைத்திருப்பார்கள்: "தேவனின் சமூகத்தை தேடுவோம். நான் போகிறேன்; நீங்கள் ஏன் என்னுடன் வரக்கூடாது ?" விசுவாசிகளாகிய நாம் இயேசு நமக்காக வந்து, மரித்து, மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதை அறிவோம். இயேசுவை உண்மையாக அறிந்து பின்பற்றும் அனைவருக்கும் இரட்சிப்பை பெற்று திரும்புகின்றனர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் . இயேசுவின் கிருபையின் பலியை மற்றும் இரட்சிப்பின் மாபெரும் கொண்டாட்டத்தில் வந்து பகிர்ந்துகொள்ளும்படி மற்றவர்களை அழைப்போம் !

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , என் வாழ்வில் உமது சமூகத்தை நான் நித்தமும் தேடுகிறேன். உம்முடைய வழிகாட்டுதல், அன்பு, பரிசுத்தம் மற்றும் சத்தியம் இல்லாமல் நான் தொலைந்துபோய் குழப்பமடைவேன். என் வாழ்க்கையின் முடிவு உம்முடைய கரங்களில் இருக்கிறது என்பதை அறிந்து, உம்முடைய பிள்ளையாக உம்மை முகமுகமாய் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தயவு செய்து உம்மை அறியாத ஆனால் உம்மை மெய்யாய் தேடுபவர்களிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். அவர்களைப் பார்க்கும்படி என் மனக் கண்களையும், அவர்களின் அழுகையைக் கேட்க காதுகளையும், உமது கிருபையை பகிர்ந்துகொள்ளும் ஞானத்தையும் எனக்கு தாரும் . உமது குமாரனுடைய வரும் மாபெரும் மீட்பின் நாளில் உம்மை சந்திக்க அவர்களைத் தயார்படுத்த என்னைப் பயன்படுத்துங்கள். என் ஆண்டவராகிய,கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து