இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் மீண்டும் மீண்டும் வாக்களித்திருக்கிறார். ஆண்கள், பெண்கள் மற்றும் தேவதுதர்கள் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்தனர். இப்போதும் ​​இயேசுவுக்குள்ளாய் அது நடக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார். இயேசுவானவரே இம்மானுவேல். அவர் வந்து நம்மை தேவ பிரசன்னத்தினால் தொட்டு சென்றதான உலகத்திலே நாம் வாழ்கிறோம். முற்காலத்திலே தீர்க்கதரிசிகள் கூறினது போலவே நடந்தேறியது.

என்னுடைய ஜெபம்

ஆண்டவராகிய தேவனே, பரலோகத்தின் பிதாவே, குறிப்பாக நீர் அவ்வாறு செய்து நம்பமுடியாத அளவிற்கு உயர்ந்த விலையை கொடுத்து உம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கு நன்றி. தேவனே , நான் உம்மை படிக்கும் ஒருவராக மட்டுமல்லாமல் , என் அனுதின வாழ்க்கையில் சந்திக்கும் ஒருவராகவும், உம்மை நன்றாக அறிய விரும்புகிறேன். நான் உம்மை தேடும் பொழுது உம்முடைய பிரசன்னத்தை உணரும்படி உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து