இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நேரங்களில் " அழுத்தம் " இரட்சிப்பின் எண்ணத்தால் நாம் மிகவும் பயப்படுகிறோம், அன்பும் கிருபையும் இறுதியில் நம்மைச் கிரியைக்கு அழைக்கின்றன, பிரதிபலிப்புக்கு மட்டும் அல்ல என்பதை மறந்து விடுகிறோம். கிரியை என்றால் முயற்சி. அதைத்தான் பேதுரு நாம் மிக சரியாக செய்யும்படி அழைக்கிறார் - "ஒவ்வொரு முயற்சியும்." இந்த முயற்சி ஏன் அவசியமானது என்பதை அடுத்த சில வசனங்களில் பேதுரு நமக்கு விளக்குகிறார். "இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால்," அவை உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே கனிகளை கொடுக்கும்படி செய்யும் {2பேதுரு 1:8-9} ! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக கனிக்கொடுக்கும்படி நாம் கையிட்டு "செய்யும் ஒவ்வொரு முயற்சியும்", ​​அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நமக்குள் கிரியை செய்து ஆவிக்குரிய கனிகளை கொடுக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் மற்றும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் தாக்கத்தை உண்டுபண்ணும் ( கலாத்தியர் 5:22-25, 2கொரிந்தியர் 3:18 ).

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம் முழுமையான சித்தத்தின்படியாகவும், உம் குணாதிசயத்துடன் மிகவும் முழுமையாக ஒத்துப்போகும்படி அடியேனை வணைந்து உருவாக்கியருளும் . எனது மகிமைக்காக நான் இதை கேட்கவில்லை , ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் உம் ஆசீர்வாதங்களையும் கிருபையையும் பகிர்ந்து கொள்ள நீர் என்னை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து