இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"தேவன் நம்மில் அன்பு கூருகிறார் " இதை மாத்திரம் வேதாகமம் சொல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது நான் உங்களை குழப்ப விரும்பவில்லை . தேவன் நம்மில் அன்பு கூருகிறார் என்று வேத வார்த்தை பலமுறை சொல்கிறது. இருப்பினும், இங்கே முக்கியமான உண்மையைத் தவறவிடாதீர்கள். தேவன் நம்மில் அன்பு கூருகிறார் என்று ஒவ்வொரு முறையும் வேதம் சொல்லும் போது, ​​அவர் அந்த அன்பையும் விளங்கச்செய்தார் .தேவனின் அன்பு உணர்ச்சியையும் நோக்கத்தையும் விட மேலானது. தேவனின் அன்பு செய்து காண்பிக்கப்பட்டது. தேவன் நம்மில் மிகவும் அன்பாயிருக்கிறார் , அவர் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று வார்த்தையினால் மாத்திரம் சொல்லவில்லை, தனது ஒப்பற்ற அன்பை நமக்குத் தருவதற்காகத் தம் நேச குமாரனையே அனுப்பி, ஜீவபலியாக ஒப்புக் கொடுத்தார் ! தேவன் கூறுவதை குறித்து நாம் ஒருபோதும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அவருடைய அன்பின் வாக்குறுதிகளை தமது கிரியைகளால் நிரூபிக்கிறார் .

என்னுடைய ஜெபம்

அன்பும்,சர்வ வல்லமையுள்ள தேவனே , என்னில் அன்பாய் இருப்பதற்காக நன்றி. என்னில் அன்பாய் இருப்பேன் என்று சொன்னதற்கும், உம் அன்பை வெளிப்படுத்தியமைக்கும் நன்றி. அன்பான பிதாவே, நானும் உம்மை நேசிக்கிறேன் என்று அறிந்துக்கொள்வீராக ! இன்று என் வார்த்தைகளையும், கிரியைகளையும் என் அன்பின் சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் . இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து