இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய "மறை முகமான பாவங்களை" சாத்தான் எப்படி அறிவான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது - குறிப்பாக கிறிஸ்துவின் பணியிலிருந்து நம்மை காயப்படுத்தக்கூடிய மற்றும் முடக்கக்கூடிய பாவங்கள் அவை . சாத்தானின் தாக்குதல்களில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், மற்றொரு நபரையும் ( நீங்கள் அவர்களுக்காக தினசரி அமைதியாக ஜெபத்தினால் தாங்குபவர்கள் ) காத்துக்கொள்ளுமாறு தேவனிடம் வேண்டிக்கொள்ளுவேன் என்று உங்கள் இருதயத்திலே தீர்மானம்பண்ணிக் கொள்ளுங்கள்.

என்னுடைய ஜெபம்

வல்லமைமிக்க ஜெயத்தின் ராஜவே , உம் எதிரிகளை உமது பாதங்களுக்குக் கீழே நசுக்கி, என்னையும் நான் நேசிப்பவர்களையும் அடக்குமுறை தாக்குதல்களிலிருந்தும், பாவத்தின் பயங்கரமான விளைவுகளிலிருந்தும் விடுவிக்கும்படி கேட்கிறேன் . என்னை மன்னித்து சுத்திகரிப்பதுமட்டுமல்லாமல் , உமக்கு ஆர்வத்துடனும் பெலத்துடனும் ஊழியம் செய்ய என்னை பெலத்தால் இடைக்கட்டி என் இருதயத்தைக் காத்தருளும். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து