இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமக்கு முன்னால் இருக்கும் பாதை கேள்விகளினாலும் ,கவலைகளினாலும் மேகம் போல சூழப்பட்டிருந்தாலும், நாம் கடந்த வந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது, ​​நாம் சென்றடையவேண்டிய இலக்கிற்கு நம்மை அழைத்துச் செல்ல, தேவன் நம்மோடு நின்று செயல்பட்ட அநேக வழிகளை நம் கண்ணார கண்டிருக்கிறோம் . ஆனால் நம் சொந்த வாழ்க்கையை காட்டிலும், வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அவருடைய கிரியையைப் பார்க்கிறோம், அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மை என்றும், அவருக்குள்ளாய் நமக்கு வெற்றி நிச்சயம் என்றும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது .

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள பிதாவே , உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே , நீர் இருந்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன் . இப்போதும் நீர் உம்முடைய கிருபையான வார்த்தையால் எங்கள் உலகத்தை நிலைநிறுத்துகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். எதிர்காலம் வருவதற்கு முன்பே நீர் அதை எங்களுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன். என் விசுவாசத்தை நினைவுகூர, நம்பிக்கையில்லாத தருணங்களில், நீர் உமது கிருபையுடன் காத்திருக்கிறீர் என்ற உறுதியான உணர்வை அடியேனுக்கு தந்து உதவியருளும் . இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து