இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

1 பேதுரு 2, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்.... " அதற்கு நாம் இங்கே சாட்சிகளாக இருக்கிறோம் என்பதை நினைப்பூட்டுகிறது. தேவனின் இரட்சிப்பின் கிரியையை நாம் கண்டும் அனுபவித்தும் இருக்கிறோம். நாம் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் . நாம் அவருடைய வல்லமைமிக்க மாபெரிதான மீட்பின் நாள் வர காத்திருக்கும், ஜனங்களாயிருக்கிறோம் . நாம் எப்படி மௌனமாக இருக்க முடியும்? நாம் எப்படி கசப்பாக, அவநம்பிக்கையாக அல்லது உற்சாகயின்மையாக இருக்க முடியும்? கல்லறையை வெறுமையாக்கி, இயேசுவின் மரண சரீரத்தை நம் ஜீவனாகவும், உயிர்தெழுந்து உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டு அவரை ஆண்டவராகவும் ஆக்கியவர் நம்முடைய தேவன் . அவரே நம்மை இரட்சிக்க வல்லவர். அவரே நம் இரட்சகர்!

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள தேவனே , நான் மிக எளிதாக என் அன்றாட வாழ்க்கையில் வழுவினேன், உமது இரட்சிப்பின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்திதின் ஆவியில் தோய்ந்து போனேன் என்று ஒப்புக்கொள்கிறேன். உமது அன்பு நிறைந்த கிரியைகள் , உமது மகத்துவமுள்ள செயல்கள், நீர் வாக்களித்த வாக்குத்தத்தங்கள் ஆகியவற்றைப் பார்க்க எனக்கு புதிய கண்களையும், தைரியமாய் சொல்லத்தக்கதான நாவையும் கொடுத்தருளும் . நீர் என்னை மகிமைக்கு வழிநடத்துகிறீர் என்று நான் நம்புகிறேன், எனவே உம்மை தேவனாக , இரட்சகராக மற்றும் ராஜாவாக அறியாதவர்களுடன் உம்முடைய மகிமையைக் காண்பிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவுங்கள். என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து