இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வார்த்தைகள் வல்லமையுள்ளது ! அவை இருதயத்தை நொறுக்கிவிடலாம் , காயப்படுத்தலாம் மற்றும் பலவீனப்படுத்தலாம். அந்த வார்த்தைகளை கொண்டு ஆசீர்வதிக்கலாம் , பெலப்படுத்தலாம் , உற்சாகப்படுத்தலாம் . அந்த வார்த்தைகள் தேவனுடைய வார்த்தையாக இருக்கும்போது, ​​அவை இன்னும் முக்கியமானவை. தேவனுடைய வார்த்தை - வேதவசனம் , சுவிசேஷம் - என்றென்றைக்கும் நிலைந்திருந்து ஜீவிக்கிறது. இது தேவனின் இந்த பரிசுத்த வேத வார்த்தைகளை தேவனின் வார்த்தையாக நமக்காக கொடுத்திருக்கிறது , மற்றும் தேவனுடன் வாழும் ஒரு வாழ்க்கையை நமக்கு ஆசீர்வாதமாய் தந்து , மேலும் தேவனோடு சேர்ந்து இருக்கும் நித்திய ஜீவனைக் கண்டறிவதற்கான வழியை காண்பிக்கிறது . தேவனுடைய திருவார்த்தை அவருடைய கிருபையைப் பற்றி நமக்கு விவரிக்கிறது மற்றும் நாம் எப்படி மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டோம் என்பதை நமக்கு போதிக்கிறது. தேவனுடைய வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமலும் , அந்த அன்பின் நற்செய்தியை புறக்கணியாமலும் அல்லது சத்தியத்தைப் பற்றி மௌனமாக இல்லாமலும் இருப்போமாக.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும், நித்தியமுமுள்ள தேவனே , மனித வார்த்தைகளை கொண்டு எங்களோடு பேசியதற்காக உமக்கு நன்றி. இயேசுவை குறித்த சுவிசேஷத்திற்காகவும் , அவருக்குள் நீர் எங்களுக்கு அருளின இரட்சிப்பின் நற்ச்செய்தியை கொடுத்ததற்காக உமக்கு நன்றி. தயவு செய்து உமது வார்த்தையை இன்னும் முழுமையாக அறிந்து அதை முழுமையாக வாழ வேண்டும் என்ற ஆழமான ஆத்தும தாகத்தை எனக்கு தாரும் . உம் வார்த்தையின் நம்பகமான, நிலையான மற்றும் நித்திய ஆதாரத்தை எனக்கு வழங்கியதற்காக நன்றி. உம் ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து