இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வீண் சிந்தனைகள் , சாத்தானின் தாக்கங்கள் மற்றும் தவறான நம்பிக்கைகளின் தாக்குதலிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க எங்கு செல்லலாம்? நாம் தேவனிடமும் அவருடைய வார்த்தைகளிடமும் செல்லலாம். மக்கள் உண்மையற்றவர்களாகவும் தவறாக வழிநடத்தப்படுபவர்களாகவும் இருக்க முடியும் என்றாலும், தேவனின் அன்பு கடந்த காலங்களின் மூலமாகவும், இயேசுவின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டு அவருடைய சத்தியம் என்றென்றும் நிலைத்திருக்கிறது.

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , நீர் மாத்திரமே நம்பகமானவர். நீர் சொன்ன வார்த்தையை நிலைப்படுத்தி உம் வாக்குறுதிகளை எப்பொழுதும் நிறைவேற்றுவீர். உமது வார்த்தையில் உம் சித்தத்தைத் தேடுவதை விட்டுவிட்டு எனது சொந்த நுண்ணறிவையும் மற்றவர்களின் ஞானத்தையும் நான் நம்பும்போது அடியேனை மன்னியுங்கள். உமது வார்த்தையில் உமது சித்தத்தை நான் தேடும்போது, ​​தயவுசெய்து உமது ஞானத்தை எனக்குக் கொடுங்கள். உம் சத்திய வார்த்தையாகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து